பாஜகவுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை – இபிஎஸ்

Published by
பாலா கலியமூர்த்தி

அதிமுக 52வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டுசென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களுடன் பூத் கமிட்டி அமைத்தல், மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்பட 82 பேர் பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர்களாக உள்ளனர்.

நடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நிறைய கட்சிகள் கூட்டணிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளது. பாஜகவுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று மக்களிடம் அழுத்தம் திருத்தமாக எடுத்து சொல்லுங்கள். தேர்தல் பணியில் மாவட்ட செயலர்கள் தலையீடு இருந்தால் புகாரளிக்கலாம் எனவும் அறிவுறுத்தினார். மேலும், வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் கைப்பற்ற பணியாற்ற வேண்டும் எனவும் கூறினார். இதனிடையே, மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

நமது ஒரே எதிரியான திமுகவை தோற்கடிப்பது தான் இலக்கு. தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி நடைபெறுகிறது. லியோ பட விவகாரத்தில் வேண்டுமென்றே தொல்லை கொடுக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தாலே இதுதான் பிரச்சனை, திரைத்துறை சுதந்திரமாக செயல்பட முடியாது. அதிமுக ஆட்சியின் போதே விஜய் படம் வெளியாக எவ்வித சிக்கலும் இல்லாமல் வெளியிட வழி வகுத்தது என தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

14 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

15 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

16 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

16 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

16 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

17 hours ago