நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் விநியோகம் கிடையாது.!

Published by
மணிகண்டன்

நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் வினியோகம் செய்யப்போவதில்லை என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பால் வினியோகம் தொழிலாளர் நலச்சங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் வினியோகம் செய்ய போவதில்லை என தமிழ்நாடு பால் முகவர் சங்கம் தொழிலாளர் நல சங்கம் சார்பில் அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.

இதுபற்றி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி கூறுககையில், ‘ ஊரடங்கில்  கஷ்டங்களை தாண்டி பொதுமக்களுக்கு தினசரி பால் வினியோகம் செய்து வருகின்றோம். ஆனால், அப்படி செய்தும் சில காவல்துறையினர் மோசமாக நடத்துகின்றனர். அத்தியாவசிய பொருளான பாலை வினியோகிக்கும் விற்பனையாளர்களை விநியோகம் செய்ய விடாமல் போலீஸார் தடுக்கின்றனர். பால் விநியோகம் செய்பவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர். பால் விற்பனை நிலையங்களை மூடச்சொல்லி கட்டாய படுத்துகின்றனர். இது போன்ற செயல்களை தமிழக முதல்வர், பால்வளத்துறை அமைச்சர், காவல்துறை அதிகாரிகள் என அனைவரது கவனத்திற்கும் கொண்டு சேர்த்தும் இதுவரை தீர்வு கிடைக்கப் பெறவில்லை. அதனால் நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் வினியோகம் செய்யப்போவதில்லை என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.’ என தெரிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்! 

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…

8 hours ago

சிறுமி மீது தவறு? சர்ச்சை பேச்சு எதிரொலி.! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!

மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…

9 hours ago

தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…

11 hours ago

AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…

12 hours ago

“கைதுக்கு நான் பயப்படவில்லை. இப்போதே விசாரணைக்கு தயார்” சீமான் பரபரப்பு பேட்டி!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…

12 hours ago

“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!

தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…

15 hours ago