“எவ்வளவு தடங்கல் வந்தாலும் மீண்டும் வேல் யாத்திரை தொடரும்” – எல்.முருகன்!

Published by
Surya

எத்தனை தடைகள் வந்தாலும் நவம்பர் 17 முதல் மீண்டும் வேல் யாத்திரை தொடரும் என பாஜக மாநில தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 8 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, வேல் யாத்திரை நடத்த தமிழக அரசு யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது.

இதனையடுத்து பாஜக சார்பில் தடையை மீறி திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அதன்படி வேலயாத்திரையும் நடந்தது. வேல் யாத்திரை கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், துணைத் தலைவர் உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

இந்நிலையில் சென்னை – தியாகராயா பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், தமிழகத்தில் எத்தனை தடைகள் வந்தாலும் நவம்பர் 17 முதல் மீண்டும் வேல் யாத்திரை தொடரூம் எனவும் திட்டமிட்டபடி டிசம்பர் 6 ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவடையும் என்றும், இதில் மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், தமிழக அரசின் செயல்களை ஏற்றுக்கொள்ளமுடியாது என கூறிய அவர், கோவிலுக்கு யாத்திரையாக செல்வது மதம் சார்ந்த நிகழ்ச்சியா? என கேள்வியெழுப்பிய எல்.முருகன், சாலையில் செல்பவர்களையெல்லாம் கைது செய்வது முன்னெச்சரிக்கை நடவடிக்கையா? எனவும் கேள்வியெழுப்பினார்.

அதுமட்டுமின்றி, முதல்வர் பழனிசாமி செல்லும் இடங்களில் கூட அதிகளவில் கூட்டம் கூடுகிறதாக குற்றம்சாட்டிய அவர், நாங்கள் கூடினால் வழக்கு, கைது நடவடிக்கை பாய்கிறது என தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

“பந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்!” தவெக தலைவர் விஜய் திடீர் பதிவு!

“பந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்!” தவெக தலைவர் விஜய் திடீர் பதிவு!

சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…

31 minutes ago

அதிமுக – பாஜக கூட்டணி! “முதலமைச்சர் பதட்டப்படுகிறார்!” “அதிமுக யாரை ஏமாற்றுகிறது?”

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…

2 hours ago

“CSK இப்படி தடுமாறியதை நான் பார்த்ததே இல்லை! ” சுரேஷ் ரெய்னா வேதனை!

சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…

2 hours ago

KKR vs GT : வெற்றி பாதைக்கு திரும்புமா கொல்கத்தா? குஜராத்திற்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இந்த…

2 hours ago

போப் மறைவு: பிரதமர் மோடி முதல் விஜய் வரை அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்தி.!

சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…

5 hours ago

உஷாரா இருங்க!! புழக்கத்தில் புதுவகை 500 ரூபாய் கள்ள நோட்டு.. மத்திய அரசு எச்சரிக்கை.!

டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…

5 hours ago