பிரதமரை எந்த அரசாங்கமும் திருப்பி அனுப்பாது – கனிமொழி எம்.பி

Default Image

மாநிலத்திற்கு திட்டங்கள் தேவைப்படுகிறது. எனவே திட்டங்களை தொடங்கி வைக்க வரும் பிரதமரை எந்த அரசாங்கமும் திருப்பி அனுப்பாது.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி எம்.பி அவர்கள் மாநிலத்திற்கு திட்டங்கள் தேவைப்படுகிறது. எனவே திட்டங்களை தொடங்கி வைக்க வரும் பிரதமரை எந்த அரசாங்கமும் திருப்பி அனுப்பாது.

கருத்தியல் ரீதியாக வேறுபாடுகள் இருந்தாலும் திட்டங்களை தொடங்கி வைக்க வரும் பிரதமரை அரசாங்கம் எதிர்க்காது என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடும் அரசாங்கத்தின் நிலைப்பாடும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது அல்ல. மக்களுக்கு எதிரான பல மசோதாக்களை அதிமுக  ஆதரித்துள்ளது. ஆனால் நாங்கள் அப்படி அல்ல என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக சீமான் மற்றும் டிடிவி தினகரன் அவர்கள் பிரதமர் மோடியின் வருகை குறித்த திமுகவின் நிலைப்பாடு குறித்து விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்