அம்பேத்கர் சட்டக் கல்லூரி அடையாள அட்டையைக் காட்டி, சலுகை கட்டண அட்டை பெற்றே பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டும்.
அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் மாநகர பேருந்துகளில் பயணம் செய்து கல்லூரிக்கு வந்து செல்வதற்கு இலவச பயண சலுகை அட்டை (பஸ் பாஸ்) கிடையாது என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. மாணவ, மாணவிகள் கல்லூரி அடையாள அட்டையுடன் பேருந்து சலுகை கட்டண அட்டையை பயன்படுத்தி (ஏசி பஸ் தவிர) பயணம் செய்யலாம் என தெரிவித்துள்ளது.
பேருந்து பயண சலுகை கட்டண அட்டை இல்லாத மாணவ, மாணவிகள் பயண சீட்டை பெற்றுத்தான் பயணம் செய்ய வேண்டும். இலவச டிக்கெட் கேட்டு பேருந்துகளில் தகராறில் ஈடுபடக்கூடாது. மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலவச பஸ் பாஸ் தொடர்பாக அரசிடம் அனுமதி கேட்டுள்ள நிலையில், அதில் தெளிவான உத்தரவு வரும் வரை தற்போதைய உத்தரவின்படியே மாணவர்கள் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…