ஓபிஎஸ், சசிகலா, தினகரனைத் தவிர வேறு யார் வந்தாலும் அதிமுகவில் சேர்ப்பது பற்றி கட்சி முடிவு செய்யும் என ஜெயக்குமார் பேட்டி.
அதிமுகவில் சமீப காலமாக தொடர்ந்து பிரச்சினைகள் நீடித்து வரும் நிலையில், தற்போது பரபரப்பான அரசியல் சூழல் மத்தியில் நேற்று டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் சந்திப்பு மேற்கொண்டார். இந்த சந்திப்பை தொடர்ந்து, ஓபிஎஸ் சசிகலாவை சந்திக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார், ஓபிஎஸ்- டிடிவி தினகரன் இணைந்தால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஓபிஎஸ் டிடிவி தினகரனை பாஜக சேர்த்துக் கொண்டாலும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட ஓபிஎஸ் க்கு மன்னிப்பே கிடையாது என தெரிவித்துள்ளார்.
மேலும், ஓபிஎஸ், சசிகலா, தினகரனைத் தவிர வேறு யார் வந்தாலும் அதிமுகவில் சேர்ப்பது பற்றி கட்சி முடிவு செய்யும். டிடிவி தினகரன் சொல்வதை எல்லாம் நகைச்சுவையாக தான் எடுத்துக் கொள்வார்கள். சசிகலாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஓபிஎஸ் தற்போது சின்னம்மா என்று கூறுகிறார். சசிகலா குடும்பத்துக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்திவிட்டு தினகரனை சந்தித்துள்ளார் என விமர்சித்துள்ளார்.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…