ஆண்களுக்கு டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் உண்மையில்லை என அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், இதுவரை தமிழ்நாட்டில் 6 கோடியே 58 லட்சம் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டுள்ளனர். பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவையால் நாள்தோறும் 30 லட்சம் பெண்கள் பயன் பெற்று வருகின்றனர்.
பெண்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்க, ஆண்களுக்கு டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் உண்மையில்லை என கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க ஓ.பன்னீர்செல்வம் பொய்க் குற்றச்சாட்டு கூறி உள்ளார்.
குறிப்பிட்டு புகார் கூறினால் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆண்களுக்கு பயணக்கட்டணம் எங்கும் உயர்த்தப்படவில்லை என தெரிவித்தார். பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 60 சதவீதமாக உயர்ந்துள்ளது. தவறு செய்த ஒரு நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக குற்றம் சாட்ட கூடாது என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்
உள்ளூர் அரசு பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லாப் பயண வசதி எனக் கூறிவிட்டு, அதனால் ஏற்படும் இழப்பை ஆண்கள் தலையில் சுமத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…