அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை இல்லை – கே.எஸ்.அழகிரி

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் மீதான ஊழல் புகார் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை இல்லை. தங்கள் மீது சுமத்தப்படும் ஊழல் புகார் ஆதாரப்பூர்வமானது இல்லை என்று அவர்கள் நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.