தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் முதல் உத்தரவாக நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்ற அறிவிப்பை அமலுக்கு கொண்டு வரும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட நகர பேருந்துகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் முதல்வராக பதவி ஏற்ற பின்பு அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் எனும் முதல் அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். இந்த அறிவிப்பு தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உடனடியாக அமலுக்கு வருகிறது.
எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர பேருந்துகளிலும் மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை எனும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. இந்த பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஸ்டிக்கர் ஒட்டும் பணியை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி அவர்கள் பார்வையிட்டு, இது குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…