சென்னை கோயம்பேடு சந்தையை தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை – சிஎம்டிஏ

Default Image

சென்னை கோயம்பேடு சந்தையை தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் இதுவரை, இந்த வைரஸ் தாக்கத்தால், 19,372 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 145 பேர் உயிரிழந்துள்ளனர்.  

இந்நிலையில், சென்னையில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இந்த வைரஸ் பாதித்துள்ள நிலையில், கோயம்பேடு உணவு  தானிய வியாபாரிகள் சங்க தலைவர் சந்திரேசன் உயர்நீதிமன்றத்தில், உணவு தானிய சந்தைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி, உரிய பாதுகாப்புடன் மீண்டும் திறக்க,  சிறப்பு அதிகாரி, சிஎம்டிஏ, மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு மீதான விசாரணையின் போது, கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், உணவு தானிய சந்தையை தற்போது  திறக்க வாய்ப்பில்லை என சிஎம்டிஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த மனு குறித்து சிஎம்டிஏ பதிலளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூன் 5-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk