கோயில்களில் வழிபடுவதற்கு தடை இல்லை -அமைச்சர் சேகர்பாபு..!

Default Image

புத்தாண்டு அன்று கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கோவில்களில் பக்தர்கள் வழிபடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஓமைக்ரான் வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வரும் நிலையில் பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் புத்தாண்டு  காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்று அதிகாலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக பலர் கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டு புத்தாண்டையெட்டி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால், புத்தாண்டு அன்று கோயில்களில் வழிபடுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா..? என்ற கேள்வி எழுந்த நிலையில், புத்தாண்டு அன்று கோயில்களில் வழிபடுவதற்கு தடை இல்லை.

அதேநேரத்தில் அரசு கொடுத்துள்ள நோய்த்தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என  அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்