தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்ட மின் கட்டண உயர்வுக்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவு.
மின் கட்டண உயர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசின் மின்கட்டண உயர்வுக்கு தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் மின்கட்டண உயர்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் 3 மாதத்தில் சட்டத்துறை அதிகாரியை நியமிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசு நியமனம் செய்யவில்லை என்றால் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட மனுதாரருக்கு நீதிபதிகள் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மின்கட்டண உயர்வு விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்த கட்டண உயர்வு 2026- 27 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுளளது. 100 யூனிட் வரை இலவச மின்சாரம் என்பதில் மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மின்கட்டண உயர்வை எதிர்த்து வழக்கும் தொடுக்கப்பட்டது. இந்நிலையில்,தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்ட மின் கட்டண உயர்வுக்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…