சிலை திருட்டு தொடர்பாக இதுவரை ஒருவரை கூட கைது செய்யவில்லை..!பொன்.மாணிக்கவேல்
என் மீது குற்றச்சாட்டு கூறிய போலீசார், சிலை திருட்டு தொடர்பாக இதுவரை ஒருவரை கூட கைது செய்யவில்லை என்று பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பொன்.மாணிக்கவேல் கூறுகையில், என் மீது புகார் அளித்தவர்கள் மீது பரிதாபம் தான் ஏற்படுகிறது, என்னுடன் பணியாற்றியவர்கள் அனைவரும் நல்லவர்களே.என் மீது குற்றச்சாட்டு கூறிய போலீசார், சிலை திருட்டு தொடர்பாக இதுவரை ஒருவரை கூட கைது செய்யவில்லை.
என் மீது அளித்த புகாரின் பின்னணியில் ஏதோ ஒன்று இருக்கிறது.துறைக்குள் நடப்பதை போலீசார் வெளியே சொல்லலாமா? என்றும் பொன்.மாணிக்கவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.