டிராக்டர் ட்ரைலருக்கு ஒப்புதல் அவசியமில்லை – உயர்நீதிமன்றம்!

Published by
Rebekal

டிராக்டர் ட்ரைலருக்கு ஒப்புதல் அவசியமில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விவசாய பயன்பாட்டிற்க்கான டிராக்டர் உற்பத்தி செய்யும் ஈரோட்டை சேர்ந்த சக்தி விநாயகா இன்ஜினியரிங் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மத்திய மோட்டார் வாகன திருத்த விதிகளில் ட்ராக்டர் ட்ரைலரை மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்து ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் அவ்வாறு பதிவு செய்வதற்காக விண்ணப்பித்த போது அந்த இணையதளத்தில் எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும், இந்த நடைமுறை தமிழகம் தவிர பிற மாநிலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழகத்தில் விவசாயிகள் வாங்கும் டிராக்டரை இணையதளத்தில் பதிவு செய்து ஒப்புதல் பெற வேண்டும் என கட்டாயப்படுத்தாமல், ஆர்.டி.ஓ அலுவலகங்களில் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிபதி ஆர் சுரேஷ் குமார் அவர்கள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் இணையதளத்தில் ஒப்புதல் பெறாமல் வாகனத்தை பதிவு செய்ய முடியாது எனவும், ஒப்புதல் பெறுவதற்காக பதிவு செய்யும்படி ட்ரைலர் இல்லாமல் பதிவு செய்யும்படி கூற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பின் வாதத்தையும் கேட்ட நீதிபதி மோட்டார் வாகனங்களில் பதிவு அவசியம், ஆனால் ட்ரைலரை மோட்டார் வாகனமாக கருத முடியாது எனக் கூறி, ட்ரைலர் இணையதளத்தில் பதிவு செய்து ஒப்புதல் பெற தேவையில்லை எனவும், மத்திய அரசின் இணையத்தில் இனி பதிவு செய்து ஒப்புதல் பெறாமல் பதிவு செய்ய போக்குவரத்துத் துறைக்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

12 mins ago

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

1 hour ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

1 hour ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

1 hour ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

1 hour ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

1 hour ago