மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை மத்திய அரசு அறிவித்த தளர்வுகள் எதுவும் நடைமுறைக்கு வராது.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து இருப்பதால் முடிவடைய இருந்த ஊரடங்கு இம்மாதம் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதையடுத்து நாடு முழுவதும் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் உயர்ந்துகொண்டு இருப்பதால் ஊரடங்கை மே ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி காணொலிக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தினார். மேலும் ஏப்ரல் 20க்கு பிறகு (நாளை) ஊரடங்கில் சில தளர்வுகள் இருக்கும் என்று கூறினார். அதற்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை மத்திய அரசு அறிவித்த தளர்வுகள் எதுவும் நடைமுறைக்கு வராது என்றும் தமிழக அரசு அறிவிக்கும் வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடரும் என்று அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், 20க்கு பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கலாம் என்று மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று மத்திய தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழக அரசு ஒரு வல்லுநர் குழுவை நியமித்துள்ளது. அந்த குழு முதற்கட்ட கூட்டத்தை நடத்தி, அதனுடைய ஆலோசனைகளை முதல்வர் பழனிசாமியிடம் நாளை தெரிவிக்க உள்ளனர். இந்த ஆலோசனை குறித்து முதல்வர் ஆராய்ந்து முடிவெடுக்க உள்ளார். இதனால் தமிழக அரசு அறிவிக்கும் வரை தற்போது உள்ள கட்டுபாடுகள் அனைத்தும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…