ஐஜி பொன் மாணிக்கவேல் மீது உயர்நீதிமன்றத்திடம் தெரிவிக்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐ ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் கோயில்களில் உள்ள சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக 21 வழிமுறைகளையும் வழங்கி இருந்தது.
இந்நிலையில் ஓய்வு பெறும் நிலையில் உள்ள தம்மீது வழக்கு தொடர சிபிசிஐடி திட்டமிருப்பதாக பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை முன்வைத்தார்.அவரது குற்றச்சாட்டை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், நீதிமன்றத்தின் அனுமதியின்றி பொன்.மாணிக்கவேல் உள்ளிட்ட சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. உயர் நீதிமன்றத்திடம் தெரிவிக்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.தொடர்ந்து விசாரணை நவம்பர் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…