நம்பர் 1 அஞ்சல., நம்பர் 2 கல்வெட்டு ரவி., பாஜகவில் இணைந்த ரவுடிகளின் பெயரை பட்டியலிட்ட மு.க.ஸ்டாலின்.!

Published by
பாலா கலியமூர்த்தி

தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பாஜகவில் இணைந்த ரவுடிகளின் பெயரை பட்டியலிட்ட பேசிய மு.க.ஸ்டாலின்.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனும் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், பாஜகவில் இணைந்த ரவுடிகளின் பெயரை பட்டியலிட்டார். இதுகுறித்து பேசிய அவர்,  சமீப காலமாக தமிழகம், புதுவையில் பாஜகவில் இணைந்து கொண்டிருப்பவர்களின் பின்னணி என்ன? என்பதை மத்திய உளவுத்துறை மூலமாக விசாரித்து பாருங்கள், நான் ஆதாரத்துடன் சொல்கிறேன் என்று கூறி, புளியந்தோப்பு பெண் தாதா கஞ்சா வியாபாரி அஞ்சல, இவர் மீது கொலை உள்ளிட்ட 10 குற்ற வழக்குகள் உள்ளது.

கல்வெட்டு ரவி என்பவர் மீது 6 முறை குண்டர் சட்டம், 8 கொலை வழக்கு உள்ளிட்ட 30 குற்ற வழக்குகள் இருக்கிறது. புதுவை எழிலரசி, இவர் கொலை வழக்கில் சிறைக்கு சென்றவர். சீர்காழி சத்யா என்பவர் செங்கல்பட்டு பகுதியில் ஏரிக்கரையில் மணல் கொள்ளையை தடுப்பவர்களின் தலையை வெட்டி கொலை செய்யும் கூலிப்படை தலைவர்கள் என கூறிய ஸ்டாலின், இதற்கெல்லாம் என்னிடம் ஆதாரம் உள்ளது, பிரதமர் மாதிரி எதை வேணாலும் பேசிவிட்டு போகமாட்டேன் நான் கலைஞரின் மகன் எதையும் ஆதாரத்துடன் தான் பேசுவேன் என கூறியுள்ளார்.

இன்னும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அதற்கு ஒரு பெரிய பாட்டிலே என்னிடம் உள்ளது என கூறிய அவர், சேலம் முரளி, நெற்குன்றம் சூர்யா, புதுவை சோழன், புதுவை விக்கி, பாம் வேலு, மயிலாப்பூர் டோக்கன் ராஜா என்று கூறிய ஸ்டாலின் பெயர்கள் எல்லாம் எவ்வளவு அழகாக இருக்கிறது என விமர்சித்தார். மேலும், கொரங்கு ஆனந்த், குடவாசல் அருண், சீர்காழி ஆனந்த், சென்னை பாலாஜி, குடந்தை அரசன், தஞ்சை பாம் பாலாஜி, ஸ்பீடு பாலாஜி, அரியமங்கலம் ஜாகிர், தஞ்சை பாக்கெட் ராஜா, குடைவாசல் சீனு, பல்லு கார்த்திக், பூண்டு மதன் என வரிசையாக பெயர்களை பட்டியலிட்டார்.

இவர்கெல்லாம் யார் என்று தயவு செய்து பிரதமர் மோடியை விசாரியுங்கள், இல்லை உள்துறை அமைச்சர் அமிட்ஷாவை விசாரிக்க சொல்லுங்கள் என தெரிவித்தார். வாய்க்கு வந்த வார்த்தைகளை திமுக மீது பேசுவதை இத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளார். ஒரு பெண் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் ஜெயலலிதா தான் என்று மோடி பேசியிருந்தார். மாநிலங்களிலேயே சிறந்த ஆட்சியை கொடுத்தது, இந்த லேடியா, இல்ல குஜராத்தை சேர்ந்த மோடியா என மறைந்த முதல்வர் ஜெயலலிதா கேட்டது இன்னமும் ஒலித்து கொண்டிருக்கிறது என ஸ்டாலின் மக்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

8 mins ago

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

33 mins ago

“நிரந்தரத் தலைவர்” கமல்ஹாசன்.! ம.நீ.ம கட்சிக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்….

சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

53 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்- முத்து மீனாவை கொல்ல துடிக்கும் சிட்டி.. விறுவிறுப்பான காட்சிகள்..!

சென்னை -சிறகடிக்க  ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து  தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…

55 mins ago

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இலங்கை தேர்தல்! மும்முனை போட்டியில் வெல்லப்போவது யார்?

இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…

1 hour ago

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

1 hour ago