நித்தியானந்தா என்றால் சர்ச்சை- தான் என்றாகி விட்டது. எப்பொழுதும் அவரை சுற்றி சர்ச்சை ஏற்பட்டு கொண்டே வருகிறது.நித்தி எங்கு இருக்கிறார் என்ற கேள்விக்கு இங்கு யாரிடமும் பதில் இல்லை ஆனால் அவ்வபோது தனது சீடர்களிடம் மட்டும் வீடியோ மூலம் எங்கோ இருந்து பேசி வருகிறார்.இந்த வீடியோவில் சர்ச்சைக்குரிய வகையிலும் பேசி வரும் நித்தி தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
நித்தியின் இந்த வீடியோவிற்கு காரணம் தனது முன்னாள் சீடர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த விஜய் என்பவர் வெளியிட்ட திடுக்கிடும் தகவலே ஆகும்.விஜய் நித்தியானந்தா தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்ற பகீரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.இந்த குற்றச்சாட்டிற்கு நித்தி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே தற்போது நித்தி வெளியிட்டுள்ள வீடியோவில் பேசுகையில் நோ சூடு,நோ சொரனை,நோ பாதர் என்ன திட்டினாலும் சீடர்கள் அவர்களிடம் அன்பைக் காட்டுங்கள் அமைதியாக இருக்க வேண்டும் திட்டுபவர்களுக்கு ஆசி வழங்க வேண்டும்.
யாரேனும் திட்டினால் அதனை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிடுங்கள் என்ன புரிகிறதா.பெரிய ஹீரோவெல்லாம் பஞ்ச் டயலாக் பேசினால் அவர்களின் ரசிகர்கள் விசில் அடிப்பார்கள். ரசிகர்களின் தேவைக்கேற்ப ஹீரோக்களும் பஞ்ச் டலயாக் பேசுவார்கள்.ஆனால் நான் பேசுவது தேவைக்காக இல்ல கடவுளின் அழுத்தத்தால் கேட்பவரின் விருப்பத்திற்க்காக பேசவில்லை சத்தியத்தின் சக்தியினால் பேசுகிறேன்.
பார்வையளர்களாக பயந்தாங்கொலிகள் ஓடி ஒலிந்து கொள்கின்றனர்.நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் சீடர்களே வென்றவருக்கும் இங்கு வரலாறு உண்டு தோற்றவருக்கு ஒரு வரலாறு உண்டு பார்த்து கொண்டிருக்கு பைத்தியங்களுக்கு ஒரு வரி கூட வரலாற்றில் இடம் கிடையாது.இறங்குங்கள் இந்த ஞானப் போரில் வென்றாலும், தோற்றாலும் கைலசம் உண்டு பொறுத்தது போதும் பொங்கி எழு என்று வீடியோ மூலம் தெரிவித்து உள்ளார்.
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…