பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் நிர்மலா வெட்டிக் கொலை.
கடந்த 2012 ஜனவரி 10-ம் தேதி, திண்டுக்கல் அருகே நத்தவனப்பட்டியில், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள 14 பேர் மீது திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இவ்வழக்கில் 5 ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி இபி காலனியைச் சேர்ந்த நிர்மலாதேவி என்பவர் மர்ம நபர்களால் இன்று காலை 10 மணிக்கு தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், நிர்மலா தேவி, திண்டுக்கல் இபி காலனி பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே நின்றுகொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நிர்மலா தேவியின் தலையை துண்டித்த மர்ம நபர்கள், நந்தவனப்பட்டி பகுதியிலுள்ள பசுபதி பாண்டியனின் வீட்டின் முன்பு வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாடிக்கொம்பு போலீஸார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் பெண் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…