போலீசை கைக்குள் வைத்துக்கொண்டு அராஜகம்… நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம்.!

Published by
மணிகண்டன்

இன்று அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவினை நேரலையில் காண இந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நேரலைக்கு தமிழக்த்தில் போலீசார் தடை விதித்ததாக கூறி விவேகானந்தா இந்து இயக்கம் சார்பில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு, அவசர வழக்காக இன்று விசாரிக்கப்பட்டது. இதில், தனியார் கோயில் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை செய்ய அனுமதி தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு அருகே எல்இடி திரைகள் அமைத்து நேரடியாக பொதுமக்கள் காண பாஜகவினர் திட்டமிட்டு இருந்தனர். இதற்காக ஒரு வார காலமாக தனியாருக்கு சொந்தமான இடத்தில் பெரிய அளவில் பந்தல் அமைக்கப்பட்டது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொள்ள இருந்தார். ஆனால் உரிய அனுமதி வாங்கவில்லை என கூறி அங்குள்ள எல்இடி திரைகளை அகற்ற கூறி காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.

ராமர் கோயில்.. முதல் பூஜை செய்த பிரதமர் மோடி..!

இதனை தொடர்ந்து இந்த விழாவானது காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாயணம் கலந்துகொண்டார்.  ராமர் சிலை நிறுவப்பட்ட பின்னர், நிர்மலா சீதாராமன் சேத்தியாளர்களிடம் பேசுகையில், தனியர் இடங்களில் நேரலை ஒளிபரப்பு செய்ய அனுமதி தேவையில்லை என நீதிமன்றம் உத்தரவு போட்டுள்ளது. அந்த உத்தரவு எத்தனை பேருக்கு சென்றடைந்தது என்று தெரியவில்லை.

பிரதமர் மோடி, ராமர் கோயில் விழாவுக்காக 11 நாள் விரதம் இருந்தார். 550 வருட காத்திருப்புக்கு பலனாக இன்று ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ளது. பகவான் ராமருக்கு பிரதமர் மோடி பூஜை செய்யப்பட்ட நிகழ்வுகளை நாம் பார்த்தோம்.  இந்த நிகழ்வை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. பல்வேறு இடங்களில் எல்இடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டு விட்டன. அதனை அவர்கள் திருப்பி கொடுக்க வேண்டும்.  இன்று நாடு முழுதுவம் அனைவரும் மன திருப்தியோடு இருக்கிறார்கள்.

கவால்துறையை கைக்குள் வைத்துக்கொண்டு, அறநிலையைத்துறை அடக்குமுறை, அராஜகத்தில் ஈடுபடுகிறது. இந்து உரிமைகளை பறிக்கும் நிகழ்வுகளை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறினார்.

Recent Posts

MI vs DC: டெல்லியை வீழ்த்தி.., பிளே ஆஃப்-யில் மாஸ் என்ட்ரி கொடுத்த மும்பை.!MI vs DC: டெல்லியை வீழ்த்தி.., பிளே ஆஃப்-யில் மாஸ் என்ட்ரி கொடுத்த மும்பை.!

MI vs DC: டெல்லியை வீழ்த்தி.., பிளே ஆஃப்-யில் மாஸ் என்ட்ரி கொடுத்த மும்பை.!

மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…

7 hours ago
அப்துல் கலாமின் பயோபிக் படத்தில் நடிக்கும் தனுஷ்.! இயக்குனர் யார் தெரியுமா?அப்துல் கலாமின் பயோபிக் படத்தில் நடிக்கும் தனுஷ்.! இயக்குனர் யார் தெரியுமா?

அப்துல் கலாமின் பயோபிக் படத்தில் நடிக்கும் தனுஷ்.! இயக்குனர் யார் தெரியுமா?

சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…

7 hours ago
ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!

ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

9 hours ago

175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?

வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…

9 hours ago

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்.? ஊர்ந்தீர்களா? தவழ்ந்தீர்களா? ஸ்டாலின் மீது இபிஎஸ் விமர்சனம்.!

சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…

9 hours ago

MI vs DC: பிளே ஆஃப்-க்கு தகுதி பெறப்போவது யார்? டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு.!

மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும்  டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…

11 hours ago