உ.பி அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா (Pran Pratishtha) இன்று பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நண்பகல் 12.30 மணி முதல் 1 மணிக்குள் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அதன் பின்னர் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள அயோத்தி சென்றுள்ளனர்.
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்குவிழாவினை நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் எல்இடி திரைகள் மூலம் மக்கள் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு அருகே எல்இடி திரைகள் அமைத்து நேரடியாக பொதுமக்கள் காண பாஜகவினர் திட்டமிட்டு இருந்தன.ர் இதற்காக ஒரு வார காலமாக தனியாருக்கு சொந்தமான இடத்தில் பெரிய அளவில் பந்தல் அமைக்கப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை காண இருந்தனர்.
ராமர் கோவில் விழா : கலந்து கொள்ளும் தமிழக பிரபலங்கள் யார்?
இந்நிலையில் காவல்துறை, பொதுப்பணித்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இதற்கு அனுமதி வழங்க மறுத்ததால் பந்தல்கள் மற்றும் எல்இடி விளக்குகள் ஆகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விழாவில் தான் மக்களோடு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவினை காண இருந்தார். தற்போது காவல்துறை மறுப்பு தெரிவித்ததன் காரணமாக தனது கண்டனத்தை எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், காவல் காஞ்சிபுரத்தில் மட்டும் 466 இடங்களில் அயோத்தி கும்பாபிஷேகத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், 400க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்ட எல்இடி திரை அமைக்க காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால் எல்இடி சப்ளையர்ஸ் அச்சத்தில் உள்ளனர். இந்து விரோத திமுக சிறு வணிகர்கள் வயிற்றில் அடிக்கிறார்கள் என கடுமையாக விமர்சித்து உள்ளார்.
அதேபோல் , நாகர்கோவில் தோவாளை முருகன் கோவிலில் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய எல்இடி திரைகள் வைக்க அனுமதி மறுக்கப்படுகிறது என்று விமர்சித்து காவல்துறையின் உத்தரவையும் கீழே நிர்மலா சீதாராமன் பதிவிட்டுள்ளார்.
மேலும், ஸ்ரீபெரும்புதூர் செல்வ விநாயகர் கோவில், தனியாரால் நடத்தப்படும் மொளச்சூர் கருமாரியம்மன் கோவில், தனியாரால் நடத்தப்படும் செல்விழிமங்கலம் ஜாம்போதை பெருமாள் கோவில் போன்ற கோவில்களில் தமிழக காவல்துறையினரால் அன்னதானம் தடுக்கப்படுகிறது. இந்துக்க்களுக்கு எதிராக, ஆளும் திமுக அரசு, காவல்துறையை பயன்படுத்தி அடக்குமுறையை தொடர்கிறது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…