பாஜக – அதிமுக கூட்டணி முறிவு.! கோவையில் நிர்மலா சீதாராமனை சந்தித்த அதிமுக எம்எல்ஏக்கள்.!

Published by
மணிகண்டன்

தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை , அதிமுக தலைவர்களை தொடர்ந்து விமர்சித்து வந்த காரணத்தால், ஒரே கூட்டணியில் இருந்த அதிமுக – பாஜக கட்சிகளுக்கு இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு, இறுதியில் பாஜக கூட்டணியில் இருந்து  அதிமுக வெளியேறுவதாக அதிமுக அதிகாரபூர்வமாக அறிவித்தது. மேலும், 2024 நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி இனி வரும் தேர்தல்களிலும் கூட்டணி இல்லை என்றும் திட்டவட்டமாக அதிமுக தலைமை அறிவித்தது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய அங்கமாக இருந்த அதிமுக விலகியதால், இதுகுறித்து விளக்கம் அளிக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் டெல்லி சென்றார். அங்கு, பாஜக தேசிய தலைவர்களான ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து அதிமுக – கூட்டணி முறிவு குறித்து விளக்கம் அளித்தார். இந்த விளக்கங்களை பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் அளிக்க உள்ளனர்.

இந்நிலையில், இன்று அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை வந்துள்ள நிர்மலா சீதாராமன் உடன் அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்தனர். இந்த சந்திப்பில் , அதிமுக எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் , வரதராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர் . உடன் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் கலந்துகொண்டார். அதிமுக – பாஜக கூட்டணி முறிவு என அதிகாரபூர்வமாக அறிவித்த பின்னர், அதிமுக எம்எல்ஏக்கள் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த சந்திப்பை அடுத்து, நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் கடனுதவி திட்டத்தின் கீழ்  948 வங்கிகள் மூலம் 3,749 கோடி ரூபாய் கடன் வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார். மேலும், சிட்பி MSME வங்கியின் புதிய கிளையையும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவங்கி வைத்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

18 minutes ago
ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

22 minutes ago
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

33 minutes ago

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

58 minutes ago

“S-400 அமைப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை” வதந்திக்கு பாதுகாப்புத்துறை விளக்கம்.!

டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…

1 hour ago

Fact Check : பாகிஸ்தானில் இந்திய பெண் விமானி கைதா.? உண்மை என்ன.?

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…

2 hours ago