தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 9 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரசின் தாக்கம் பல நாடுகளில் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்திலும் இந்த வைரஸின் தாக்கம் பரவியிருந்தது. இருப்பினும் தூத்துக்குடியில் 30க்கும் குறைவானவர்களுக்கு வைரஸ் தாக்கம் ஏற்பட்ட நிலையில், ஏற்கனவே சிலர் குணமாகி வீடு திரும்பினார்கள்.
இந்நிலையில் அண்மையில் 27 பேருக்கு கொரோனா இருப்பதாக உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடந்த 10ஆம் தேதி 70 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 9 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அவர்களுக்கு பழங்கள் மற்றும் தேவையான ஆரோக்கிய பொருட்கள் கொடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வழி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் குணமாகியவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…