தூத்துக்குடியில் கொரோனாவிலிருந்து 9 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்!

Default Image

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 9 பேர்  குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரசின் தாக்கம் பல நாடுகளில் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்திலும் இந்த வைரஸின் தாக்கம் பரவியிருந்தது. இருப்பினும் தூத்துக்குடியில் 30க்கும் குறைவானவர்களுக்கு வைரஸ் தாக்கம் ஏற்பட்ட நிலையில், ஏற்கனவே சிலர் குணமாகி வீடு திரும்பினார்கள்.
இந்நிலையில் அண்மையில் 27 பேருக்கு கொரோனா இருப்பதாக உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடந்த 10ஆம் தேதி 70 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 9 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அவர்களுக்கு பழங்கள் மற்றும் தேவையான ஆரோக்கிய பொருட்கள் கொடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வழி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் குணமாகியவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்