நீலகிரி : கூடுதல் போனஸ் கோரி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்….!

நீலகிரியில் கூடுதல் போனஸ் கோரி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள சாலிஸ்பரி கூட்டுறவு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு கூடுதல் போனஸ் வேண்டும் என கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதமே நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை எனவும் விரைவில் தங்களுக்கான தீபாவளி போனஸ் வழங்க வேண்டுமெனவும் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர்.
இந்நிலையில் தற்பொழுது 20% போனஸ் கேட்ட நிலையில், தங்களுக்கு 10 சதவீதம் மட்டுமே தீபாவளி போனஸாக வழங்கப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக போனஸ் வேண்டுமெனவும் கோரி தொழிலாளர்கள் அனைவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025