#CORONABREAKING: தமிழகத்தில் இரவு ஊரடங்கு.., தமிழக அரசு அறிவிப்பு.!

Default Image

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் இரவு 10 மணி அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட முதல் அலை கொரோனாவை விட தற்போது இரண்டாவது அலை கொரோனா காரணமாக நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும்,  கட்டுப்பாடுகள் அதிகரிப்பது தொடர்பாகவும் இன்று  சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் முதல்வர்  ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனையில் சில முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவு ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் இரவு 10 மணி அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல்ப்படுப்படுகிறது. மேலும், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி ரத்து, பூங்காக்கள், உயிரியல் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை.

ஏற்கனவே ராஜஸ்தான், டெல்லி போன்ற மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போது தமிழ்நாட்டிலும் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்