இரவு ஊரடங்கு மீறி வெளியே வருபவர்களிடம் கண்ணியமாக பேசுங்கள். அசம்பாவிதம் நிகழாமல் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.
தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், தற்போது பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 20-ஆம் தேதி இரவு 10 மணியிலிருந்து இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதனை அடுத்து சென்னையில் 2 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 200 வாகன சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், போலீஸ் வாக்கி டாக்கி மூலம் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இரவு ஊரடங்கை மீறி வெளியே வருபவர்களிடம் கண்ணியமாக பேசுங்கள். அசம்பாவிதம் நிகழாமல் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். கடைகள் மூடப்பட்டு உள்ளதா என்பதை கண்காணியுங்கள். மருத்துவத் தேவை மற்றும் பிற அவசர தேவைகளுக்கு செல்பவர்கள் உரிய ஆவணங்களை பரிசோதித்து அவர்களை செல்வதற்கு அனுமதி கொடுங்கள் என்றும், தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்யுங்கள் என்றும் அறிவுரை வழங்கியுள்ளார்.
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…