நாட்டில் சட்டவிரோத சர்வதேச நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வரும் தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ (NIA) அவ்வப்போது சந்தேகத்தின் பெயரில் நாட்டின் பல்வேறு இடங்களில் சோதனை செய்து வருவது வழக்கம். தமிழகத்திலும் அவ்வப்போது இந்த சோதனைகள் தொடர்ந்து வருகிறது.
அலுவலகம் திறந்த பாஜக.! சீல் வைத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் ..!
இன்று அதிகாலை முதலே சென்னை, கோவை, விருதுநகர், மதுரை, நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். கோவையில் மெக்கானிக் அபிபுல் ரகுமான், நெல்லையில் ஓர் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த பக்ருதீன் என்பவர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை தொடர்கிறது.
இந்த சோதனையானது கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவை உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த சம்பவத்தின் கீழ் 15 பேர் கைது செய்யப்பட்டு தற்போது வரையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையில் உள்ளனர்.
தற்போது வரையில் இந்த சோதனை மற்றும் சோதனை நடைபெறும் இடங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…