யூ-டியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக்க சேலம் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் ஆகியோர் தங்கியிருந்த வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, போலீசார் வாகனசோதையில் ஈடுபட்டபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த சேலத்தை சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் ஆகியோரை சோதனை செய்ததில், அவர்களிடம் துப்பாக்கி, கத்தி, முகமூடி போன்ற ஆயுதங்கள் இருந்துள்ளது.
இதனை தொடர்ந்து அவர்களை விசாரிக்கையில், சேலம் செட்டிச்சாவடி அருகே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தது அங்கு யூ-டியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததும் தெரியவந்துள்ளது.
சேலம் ஊத்துமலை கல்குவாரியில் இருந்து வரும் லாரிகளில் வெடிகுண்டு வைக்க திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நாட்டில் நடக்கும் தவறுகளை தட்டிக்கேட்க புரட்சியாளர்களாக மாற இருந்ததாகவும், தங்களுக்கு கபிலன் என்பவர் உதவியதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து கபிலனையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர் தற்போது அவர்கள் மூவரும், சேலம் மத்திய சிறையில் இருக்கின்றனர்.
இந்நிலையில், அந்த மூவருக்கும் வேறு எதுவும் தீவிர அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறதா என தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ , அந்த மூவரும் வாடகை கொடுத்து தங்கியிருந்த வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…