அடுத்தடுத்து திமுகவுக்கு வைக்கும் செக்…செந்தில் பாலாஜி வீட்டில் ஐ.டி. ரெய்டு.!

Default Image

கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், ஒருபக்கம் அனைத்து அரசியல் கட்சிகளுகம் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மறுபக்கம் முக்கிய தலைவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் வீட்டில் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில், இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள், செந்தாமரை வீடு மற்றும் மருமகன் சபரீசன் வீட்டிலும் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக், ஜீ ஸ்கொயர் பாலா வீட்டிலும் சோதனை மேற்கொள்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து, தற்போது கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திமுகவினர் வீடுகளில் அடுத்தடுத்து வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே தமிழகத்தில் இன்று காலை முதல் சுமார் 15 இடங்களில் வருமான வரித்துறை சோதனைகள் நடைபேற்று வருகின்றன என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்