அடுத்த 6 மாதங்களில் மேலும் பத்து செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என்றும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய சிவன், பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் வெற்றி எதிர்கால திட்டங்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அடுத்த 6 மாதங்களில் மேலும் பத்து செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு வருவதாக கூறினார்.
வரும் காலங்களில் செலுத்தப்படும் செயற்கைக் கோள்கள் பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு உதவும் வகையில் தொழில்நுட்ப வசதிகளை அதிகரிக்கும் என்றும் சிவன் தெரிவித்தார்.
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் மீதான பொய்யான வழக்கு தொடர்பான பிரச்சினைகளுக்கு பதிலளித்த அவர், இப்பிரச்சினைக்கும் இஸ்ரோவுக்கும் எந்த தொடர்புமில்லை என்றும், இது கேரள அரசு சம்பந்தப்பட்ட விவகாரம் என்றும் விளக்கம் அளித்தார்.
DINASUVADU
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…