கடும் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம்.! ட்ரோன் மூலம் காவல்துறை கண்காணிப்பு.!

Default Image

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு டிசம்பர் 31 அன்று இரவு சென்னையில் 368 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும், இதுவரை டிசம்பர் 25 முதல் 360 வாகனங்கள் விதிகளை மீறியதால் சீஸ் செய்யப்பட்டது எனவும், ரேஸில் ஈடுபடும் வாகனங்களை கண்காணிக்க தெளிவாக இரவில் படம்பிடிக்க கூடிய டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்தார்.

  மேலும், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் மது குடிக்கிறார்களா என கண்காணிக்க மஃப்டியில் காவல்துறையினர் ஈடுபட உள்ளனர் எனவும், புத்தாண்டு கொண்டாட்டத்தில் போதை பொருள் கைப்பற்றப்பட்டால் அந்த இடத்திற்கு சீல் வைக்கப்படும் எனவும், 1 மணிக்குள் அனைத்து விடுதிகளிலும் கொண்டாட்டங்கள் நிறைவு பெற்று அனைவரையும் வெளியேற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது என சென்னை காவல் ஆணையர் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்