திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கிராமத்தில், தனது வீட்டு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, பராமரிப்பின்றி கிடந்த ஆழ்துளை கிணற்றில், 2 வயது குழந்தையான சுஜித் விழுந்ததில், 5 நாட்களுக்கு பின் இவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.
இதனையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளை மூடுமாறு, அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 24 மணி நேரத்திற்குள் பயன்படாமல் கிடைக்கும் ஆழ்துளைக்கிணறுகளை மழைநீர் சேகரிப்பு நிலைகளாக மாற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, அதிமுக தொழில்நுட்ப பிரிவு, அபாய நிலையிலுள்ள ஆழ்துளை கிணறுகளை கண்டறிய “விசில் ரிப்போர்ட்டர்” என்ற செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலியை பிளே ஸ்டோரில் தரவிறக்கல் செய்து கொண்டு, மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம்.
இந்த செயலியை பயன்படுத்துபவர்கள், பயன்படாத ஆழ்துளை கிணற்றின் அருகில் நின்றுகொண்டு, செயலின் வலதுபுறமாக கீழே இருக்கும் பச்சை நிற பொத்தானை அழுத்தினாள் தகவல் சென்றுவிடும். பிறகு உங்களது லொகேஷனை கண்டுபிடித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த செயலி குறித்த விபரங்களை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…