அயலக தமிழர் தின விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், அயலக தமிழர்களுக்கான பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற அயலக தமிழர் தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் முக ஸ்டாலின், அயலக தமிழர்களுக்கான பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பில், அயல்நாடுகளில் பணிக்கு சென்று எதிர்பாராத விதமாக இறந்து விடுவோர் குடும்பத்துக்கு மாத ஓய்வூதியம் திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் குறித்து விரிவான தரவுகள் ஆவணப்படுத்தப்படும். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள், இளம் மாணவர்களில் ஆண்டுக்கு 200 பேர் தேர்வு செய்யப்படுவர். அம்மாணவர்கள், தமிழ்நாடு பண்பாட்டு சுற்றுலாவுக்காக, தமிழ்நாடு அழைத்து வரப்படுவர். அயல்நாடு செல்லும் தமிழர்கள் குறித்து தரவு தளம் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார்.
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…