திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன், கடந்த மாதம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைத்துக்கொண்டார். சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணை தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிய நிலையில், தனது ஆதரவாளர்கள் 78 பேருடன் மகேந்திரன் திமுகவில் இணைந்தார்.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து திமுகவில் இணைந்த மகேந்தரனுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், கழக சட்டத்திட விதி 31-பிரிவு, 19ன் படி திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளராக ஆர்.மகேந்தரன் எம்பிபிஎஸ்., எம்டி தலைமை கழகத்தால் நியமிக்கப்படுகிறார் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சென்னை : லவ் டுடே எனும் படத்தை கொடுத்து தற்போதைய வளர்ந்து வரும் நடிகர் மற்றும் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார்.…
சென்னை : அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
காசா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து பேசியியிருந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என…
சென்னை : அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னை…
பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான்…