திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன், கடந்த மாதம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைத்துக்கொண்டார். சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணை தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிய நிலையில், தனது ஆதரவாளர்கள் 78 பேருடன் மகேந்திரன் திமுகவில் இணைந்தார்.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து திமுகவில் இணைந்த மகேந்தரனுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், கழக சட்டத்திட விதி 31-பிரிவு, 19ன் படி திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளராக ஆர்.மகேந்தரன் எம்பிபிஎஸ்., எம்டி தலைமை கழகத்தால் நியமிக்கப்படுகிறார் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…