திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன், கடந்த மாதம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைத்துக்கொண்டார். சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணை தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிய நிலையில், தனது ஆதரவாளர்கள் 78 பேருடன் மகேந்திரன் திமுகவில் இணைந்தார்.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து திமுகவில் இணைந்த மகேந்தரனுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், கழக சட்டத்திட விதி 31-பிரிவு, 19ன் படி திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளராக ஆர்.மகேந்தரன் எம்பிபிஎஸ்., எம்டி தலைமை கழகத்தால் நியமிக்கப்படுகிறார் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…
டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…