New Residence [File Image]
வேலூர் மாவட்டம் மேல்மொனவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிய குடியிருப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். அதன்படி, மேல்மொனவூரில் ரூ.11 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 220 குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் திட்டம் கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், வேலூர் உள்பட சேலம், தருமபுரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 1,591 குடியிருப்புகளை முதல்வர் திறந்து வைத்துள்ளார்.
இதற்கிடையில், இந்திய சமூக ஆர்வலரான தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட மூத்த அமைச்சர்கள் பலரும், வேலூரில் உள்ள திமுக அலுவலகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் பலரும் சாதிய ஏற்றத்தாழ்வு, தீண்டாமைக்கு எதிராக சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றனர். இதைத்தொடர்ந்து, வேலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இதுவரை கட்டி முடிக்கப்பட்ட 1,591 புதிய குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
சென்னை : இன்று இந்து கடவுள் முருகனுக்கு உகந்த பண்டிகைகளில் ஒன்றான தைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் மற்றும்…
சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…