புதிய கல்விக்கொள்கை ! முதலமைச்சர் குழுவை அறிவிப்பார் -அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

Default Image

புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய முதலமைச்சர் விரைவில் குழுவை அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு அண்மையில் புதிய கல்விக்கொள்கை குறித்து அறிவித்தது.ஆனால் இந்த அறிவிப்பில் மும்மொழிக் கொள்கை குறித்த அறிவிப்பிற்கு தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இதனால்   தமிழக அரசு  மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இரு மொழி கல்வி கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார் .

இதனிடையே சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய முதலமைச்சர் விரைவில் குழுவை அறிவிப்பார். தமிழக அரசு அமைக்கும் குழுவின் கருத்தை அறிந்த பிறகே புதிய கல்விக் கொள்கை குறித்து முடிவெடுக்கப்படும். மும்மொழிக் கொள்கை தொடர்பாக முதலமைச்சர் ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டார் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்