[file image]
தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக சிவதாஸ் மீனா நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்.
தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு இந்த மாதம் 60 வயது பூர்த்தி அடைவதை அடுத்து, வரும் 30ஆம் தேதி நாளை ஓய்வு பெற உள்ளார். அதனால், தமிழகத்தில் அடுத்த தலைமை செயலாளர் யார் என முதல்வர் முக ஸ்டாலின் சமீபத்தில் ஆலோசனை நடத்தி இருந்தார். அடுத்த தலைமை செயலாளர் பட்டியலில் 13 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவதாஸ் மீனா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சிவதாஸ் மீனா கவனிக்கும் நகராட்சி நிர்வாக செயலர் பதவி கார்த்திகேயனுக்கு வழங்கப்பட உள்ளதாகவும், ஊரக வளர்ச்சித்துறை ஆணையராக உள்ள தாரேஸ் அகமது மாற்றப்படுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலர் யார்? என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது. மேலும், பொதுத்துறை செயலாளராக நந்தகுமாரும், டிஎன்பிஎஸ்சி தலைவராக டிஜிபி சைலேந்திரபாபு நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இம்மாதம் தான் டிஜிபி சைலேந்திர பாபுவும் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…