armstrong [file image]
ஆம்ஸ்ட்ராங் கொலை : குஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகள் வெளியிடபட்டுள்ளது.
பகுஜன் சமாஜ்வாடி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூன் 5-ஆம் தேதி சென்னை, பெரம்பூரில் அவரது வீட்டின் அருகே மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அந்த 11 பேரையும் சிபிசிஐடி போலீசார் காவலில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த 11 பேரில் திருவேங்கடம் என்பவரை விசாரணைக்காக போலீசார் சென்னை மாதவரம் ஏரிக்கரை அருகே அழைத்துச் சென்று ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை காட்டவேண்டும் என்று கூறியுள்ளனர். அப்போது, திருவேங்கடம் மறைத்து வைத்து இருந்த பொருட்களை வைத்து காவல்துறையினரை தக்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக, தற்காப்புக்காக போலீசார் திருவேங்கடத்தை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாகவும் தகவல் வெளியானது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, கொலைக் குற்றவாளியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்து செல்லும் போது கைவிலங்கு மாட்டப்பட்டு தான் காவல்துறையினர் அழைத்துச் சென்றனரா? யாரைக் காப்பாற்ற இந்த என்கவுண்டர் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி இருந்தார்.
அது மட்டுமின்றி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் உண்மையான குற்றவாளியா என்ற கேள்விகளும் பல தரப்பில் இருந்து எழுந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் தான் உண்மையான குற்றவாளி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது.
வீடியோவில் “ஆம்ஸ்ட்ராங் வீடு கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கும் தெருவில் நின்று கொண்டிருந்த சமயத்தில் அந்த தெருவில் முதலில் ஒரு பைக்கில் தனி ஆளாக நோட்டமிட்டு செல்கிறார். அதற்கு பின் இரண்டு பேர் தனி தனியாக பைக்கில் வருகிறார்கள். பின், அனைவரும் சேர்ந்து ஆம்ஸ்ட்ராங்கை கொண்டு வந்த கத்தியால் கொடூரமாக வெட்டினார்கள்.
இதனை பார்த்த அவருடன் இருந்தவர்கள் ஆம்ஸ்ட்ராங்கை காப்பாற்ற முன் வந்த நிலையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் அவர்களையும் கத்தியை வைத்து தாக்க முயன்றார்கள். இதனால் அவர்களும் தப்பி ஓடினார்கள். கொலை செய்துமுடித்த பின் அனைவரும் தப்பி ஓடினார்கள். கைது செய்யப்பட்டு இருப்பவர்களின் பெயர்களை தெளிவாக ரவுண்ட் செய்து போலீசார் வெளியீட்டு இருக்கிறார்கள்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…