பிறந்து 2 நாளே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரோனா உறுதி.!
கோவையில் பிறந்து 2 நாட்களேயான பச்சிளம் குழந்தைக்கும் கொரோனா தொற்று இன்று உறுதியாகியுள்ளது. இதுவரை கோவையில் 133 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 105 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, 1477 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை 15 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
கோயம்புத்தூரில் இன்று மட்டும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை 133 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிறந்து 2 நாட்களேயான பச்சிளம் குழந்தைக்கும் கொரோனா தொற்று இன்று உறுதியாகியுள்ளது.