நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் மற்றும் அவர் வீட்டு பணிப்பெண் ஆகியோர் ஜூலை 23ஆம் தேதி உமா மகேஸ்வரி அவர்களின் வீட்டிலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக பலகட்ட விசாரணை, தடையங்கள், சிசிடிவி காட்சிகள் போன்றவற்றை ஆராய்ந்து திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள் மகனான கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர்.
இவர் கொடுத்த வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக இருந்ததாலும், நீங்க பொலிஸ்தானே முடிந்தால் கண்டுபிடியுங்கள் என கூறியதும் போலீஸ்காரர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பின்னர் இவரிடம் விசாரிக்கையில் பணிப்பெண் மாரியம்மாளை எதற்காக கொன்றார் என்ற காரணத்தை கூறியுள்ளார். அதில், ‘ அதில் உமா மகஸ்வரியையும், அவரது கணவரையும் கொலை செய்துவிட்டு, பார்க்கையில் பணிப்பெண் சமயலறையில் இருந்து வெளியே வந்து அதிர்ச்சியாகி கூச்சலிட்டார். பிறகு அவரை வீட்டை விட்டு செல்லுமாறு மிரட்டினேன்.ஆனால் அவர் போகவில்லை. பின்னர், கத்தியால் குத்தினேன். ரத்த வெள்ளத்தில் இருந்த அவர், தன்னை விட்டுவிடுமாறும், தனக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் கெஞ்சினார். நான் அவருக்கு ஆண்குழந்தைகள்தான் இருப்பார்கள். எப்படியும் பிழைத்து கொள்வார்கள் என நினைத்தேன். ஆனால், அவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருப்பது எனக்கு தெரியாது.’ என திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…