பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சரையும் ஒருமையில் பேசிய விவகாரம்! நெல்லை கண்ணன் அதிரடி கைது!

Published by
மணிகண்டன்
  • ஞாயிற்று கிழமை நடந்த போராட்டத்தில் நெல்லை கண்ணன் பேசுகையில் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
  • இதன் காரணமாக நேற்று இரவு பெரம்பலூயில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி சார்பாக திருநெல்வேலியில் கடந்த ஞாயிற்று கிழமை போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தின்போது பேச்சாளரும் எழுத்தாளருமான நெல்லை கண்ணன் பேசும்போது, பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் பற்றியும் கருத்துக்களை இவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் பேசிய காணொளி இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

இந்நிலையில் பிரதமர் மோடியையும், அமித்ஷாவை ஒருமையில் பேசியதாக கூறப்பட்ட நெல்லை கண்ணன் கைது செய்யபட வேண்டும் என பாஜக சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய போலீசார் விரைந்தனர். ஆனால், அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என ஒரு திருநெல்வேலியில் இருந்து மதுரை தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சென்றார்.

பின்னர், அங்கிருந்து  பெரம்பலூர் தனியார் விடுதியில் நெல்லை கண்ணன் சென்று அங்கு தங்கியிருந்தார். பாஜகவினரின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து போலீசார் அவரை பெரம்பலூர் தனியார் விடுதியில் நேற்று இரவு கைது செய்தனர்.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

4 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

4 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

4 hours ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

6 hours ago

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

6 hours ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

8 hours ago