பழுதடைந்த 92 பள்ளி கட்டடங்களை இடிக்க நெல்லை ஆட்சியர் உத்தரவு..!

Default Image

நெல்லை மாவட்டத்தில் பழுதடைந்த 92 பள்ளிக்கூடங்களை இடிக்க ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே  உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர்  இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், மாவட்டத்தோறும் அங்கு இருக்க கூடிய முதன்மை கல்வி அதிகாரி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சேர்ந்து குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு, கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்த்துள்ள நிலையில்,  38 மாவட்டங்களில், பள்ளி கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்ய 19 கல்வி அலுவலர்களை நியமித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.

அந்த வகையில், மதுரை, புதுக்கோட்டை, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், பழுதடைந்த கட்டடங்களை இடிக்க உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் பழுதடைந்த 92 பள்ளிக்கூடங்களை இடிக்க ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார். முதல்கட்டமாக 8 கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 2 நாளில் இடிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Joe Root
erode by election 2025
edappadi palanisamy mk stalin
R Ashwin -- Virat kohli
abhishek sharma varun chakravarthy
vidaamuyarchi anirudh