நீட் தேர்வு குழு;பாஜகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் – தி.க. தலைவர் மனுதாக்கல்..!

Published by
Edison

நீட் தேர்வு குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திராவிட கழக தலைவர் வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

நீட் தேர்வு பாதிப்புகளை குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்நிலையில்,நீட் தேர்வு குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்துள்ள வழக்கில் இடைமனுதாரராக திராவிட கழக தலைவர் கி.வீரமணி அவர்களும் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

“நீட் தேர்வானது மாணவர் சமுதாயத்தில் குறிப்பாக மாணவிகளின் உயிரை பறிக்கும் வகையில் உள்ளது.சமூகத்தில் பின்தங்கிய மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யவும் ,

மேலும்,தொலைதூர கிராமங்களில் வசிப்பவர்களுக்கு வசதி செய்வதற்கும்,அவர்களின் வாழ்க்கை மற்றும் கல்வி வாய்ப்பை பாதுகாப்பதற்கும் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளை பரிந்துரைக்கவுமே குழு அமைக்கப்பட்டுள்ளது.

எனவே,குழு அறிக்கையை அரசு என்ன செய்ய போகிறது என்பதை அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.இதனால்,குழு அறிக்கையை சமர்பிக்கும் முன்பே வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தை குழப்ப பார்க்கின்றனர். குறிப்பிட்ட பாடதிட்டத்தில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மற்றொரு தேர்வு என்பது நியாயமற்றது.

குழு அமைக்க அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது.எனவே,பாஜகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாஜக மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று நேற்று ஒரு மாணவி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த இரு மனுக்களும் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

Published by
Edison

Recent Posts

பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!

பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…

17 minutes ago

தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,

சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…

1 hour ago

LIVE : தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்… 2வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம் வரை!

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…

2 hours ago

சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…

3 hours ago

வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!

வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…

3 hours ago

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!

துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…

4 hours ago