போலி நீட் சான்றிதழ் சமர்ப்பித்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த பல்மருத்துவர் பாலச்சந்திரன் கைது.
போலி நீட் சான்றிதழ் சமர்ப்பித்த வழக்கு தொடர்பாக பல்மருத்துவர் பாலச்சந்திரனை பெரியமேடு காவல்துறையினர் கைது செய்தனர். ராமச்சந்திரன் பெங்களூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த நிலையில், தனிப்படை போலீசார் பெங்களூர் சென்று அங்கு பாலச்சந்தரை கைது செய்து சென்னை கொண்டு வந்தனர்.
பின்னர், பெரியமேடு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது. போலி சான்றிதழ் எப்படி கிடைத்தது..? என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வாக்குமூலத்தை போலீசார் பெற்றனர். இந்நிலையில், எழும்பூரில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி வீட்டில் பல்மருத்துவர் பாலச்சந்திரன் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, வருகின்ற 11-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெரியமேடு போலீசார் மூன்று முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில் போலீஸ் பாலச்சந்திரனை கைது செய்தது.
மருத்துவ கலந்தாய்வு குழு தலைவர் அளித்த புகாரின் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அவரது தந்தை பல்மருத்துவர் பாலச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…