“நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது”- பதாகையுடன் சட்டப்பேரவைக்கு வந்த எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி!
“நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது” என்ற பதாகையுடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி சட்டப்பேரவைக்கு வந்தார்.
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, கொரோனா பரவலுக்கு மத்தியிலும் நடைபெற்றது. நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 3 பேர் தற்கொலை செய்தனர். இந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன்காரணமாக நீட் தேர்வை ரத்து செய்யவேண்டுமென மத்திய அரசுக்கு பலரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், தமிழகத்தில் 2வது நாளான இன்று சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் கலந்துகொள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, “நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது” என்ற பதாகையுடன் பதாகையுடன் சட்டப்பேரவைக்கு வந்தார்.