நீட் தேர்வு : தமிழக மாணவர்கள் புதிய சாதனை ..! 58.47% மாணவர்கள் தேர்ச்சி ..!!

Published by
அகில் R

நீட் தேர்வு : கடந்த ஆண்டு மே-5 ம் தேதி அன்று தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) நடைபெற்றது. அந்த நுழைவுத் தேர்வை இந்தியா முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். இந்த நீட் தேர்வுக்கான முடிவுகளை நேற்று (ஜூன்-5) மாலை தேசிய தேர்வாணையம் வெளியிட்டது.

அதில் 13,16,268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் அதாவது 56.41% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 0.2% சதவீதம் அதிகமாகும். தமிழகத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு 1,52,920 மாணவர்கள் தேர்வெழுதி உள்ளனர். அதில் 89,426 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த தேர்வு முடிவுகளில், தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் புதிய சாதனையை படைத்துள்ளனர். அதில் முதலில் தமிழகத்தில் தேர்வெழுதிய 1,52,920 மாணவர்கள் மாணவர்களில் 89,426 (58.47%) மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தமிழகத்தில் 1,44,514 பேர் தேர்வு எழுதி அதில் 78,693 (54.45%) பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அடுத்ததாக இந்த ஆண்டு வெளியான முடிவுகளில் நாடு முழுவதும் உள்ள 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதில் தமிழகத்தில் மட்டும் 8 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் இந்திய அளவில் ராஜஸ்தானுக்கு (11 மாணவர்கள்) பிறகு தமிழகம் 2-ம் இடம் பிடித்து சாதனையை படைத்துள்ளது.

Published by
அகில் R

Recent Posts

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்..சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்..சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம்   கடந்த மார்ச்…

29 minutes ago

“ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருமை” நாடாளுமன்றத்தில் பாராட்டு மழையில் இளையராஜா!

டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…

31 minutes ago

இதுதான் ஒரிஜினல் சம்பவம்.. தெறிக்கும் அஜித் வசனங்கள்…GBU ஃபர்ஸ்ட் சிங்கிள் இதோ!

சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…

1 hour ago

10 ஆண்டுகளில் ED ரெய்டின் சாதனை இதுதான்! வெளியான புதிய அறிக்கை!

டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க  விசாரணை அமைப்பு ஆகும். இந்த…

2 hours ago

முதல்ல சீக்கிரம் தூங்குங்க…பார்முக்கு வாங்க! பிரித்வி ஷாவுக்கு அட்வைஸ் கொடுத்த பஞ்சாப் வீரர்!

பஞ்சாப் :  ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க இப்போ உங்களுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்கிற கேள்வியை இளம்…

2 hours ago

ட்ரூத் சோஷியல் மீடியாவில் இணைந்த பிரதமர் மோடி! பலே திட்டம் தீட்டிய டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக ‘ட்ரூத் சொஷியல்’ (Truth Social) சமூக ஊடக தளம் வைத்திருக்கிறார்.…

3 hours ago