நடக்குமா தேர்வு?! +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பா? இன்று முக்கிய முடிவு.

Published by
kavitha

நாடு முழுவதும்  அமைந்துள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா மற்றும் ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு ‘நீட்’  என்கிற நுழைவுத் தேர்வின் அடிப்படையில்  மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு, ‘நீட்’ நுழைவு தேர்வு, மே, 3ல் நடைபெற்று இருக்க வேண்டும் ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக  நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக  ஜூலை., 26க்கு  தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.

கொரோனா பாதிப்பு  தமிழகத்தில் காற்றை விட மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. எப்போது கட்டுக்குள் வரும் என்று தெரியவில்லை அது கடவுளுக்கு தான்  தெரியும் என்று முதல்வரே  முன்மொழிந்த நிலையில் பள்ளித்தேர்வுகள்  ரத்து செய்யப்பட்டதுடன் ,பல்கலை கழகத்தேர்வுகள் ஒட்டுமொத்தமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற வேண்டிய நீட் தேர்வை ரத்து செய்து விட்டு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலே மருத்துவ படிப்புக்கு மாணவர்களை சேர்க்கையை நடத்த வேண்டும்.மேலும் நாடு முழுவதும் கொரொனா கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தேர்வு குறித்து  மத்திய அரசிடம், தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: நீட் தேர்வில் இருந்து விலக்கு கோருவது குறித்து, தன்னிச்சையாக கூற முடியாது.அரசு தான் முடிவுவெடுக்கும். நீட் தேர்வுக்கு, இன்னும் ஒரு மாத கால அவகாசம் உள்ளது. தமிழகத்தை போலவே, டில்லி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும், கொரோனா தாக்கம் கடுமையாக உள்ளது. எனவே, நீட் தேர்வை ஒத்திவைப்பது குறித்து, மத்திய அரசு தான் முடிவெடுக்கும் என தெரிவித்தார்.

இந்நிலையில் நீட் தேர்வு நடக்குமா? இல்லை தேர்வினை மேலும் சிறிது காலத்திற்கு தள்ளிவைப்பதா? ஆகியன குறித்து  மத்திய அரசின் முக்கிய முடிவு குறித்த தகவல் இன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மத்திய அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்று மாணவர்களும் ஆர்வத்துடனும்,எதிர்ப்பார்ப்புடனும் உள்ளனர்.

Published by
kavitha

Recent Posts

தேர்தலுக்கு தயாராகுங்கள்.., தவெக கட்சியினருக்கு சிறப்பு பயிற்சி அளித்த ஆதவ் அர்ஜுனா! 

தேர்தலுக்கு தயாராகுங்கள்.., தவெக கட்சியினருக்கு சிறப்பு பயிற்சி அளித்த ஆதவ் அர்ஜுனா!

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…

22 minutes ago

அது ஃபேக்…ரூ.2,000 மேல் பணம் அனுப்பினால் ஜிஎஸ்டி வரியா..? உண்மையை உடைத்த அரசு!

டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…

50 minutes ago

குடிபோதையில் பயணம்! நடிகர் பாபி சிம்ஹாவின் கார் பறிமுதல்! ஒருவர் கைது!

சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…

1 hour ago

மதிமுகவில் இருந்து விலகிய துரை வைகோ! ஷாக்காகி வைகோ சொன்ன பதில்?

சென்னை :  துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…

1 hour ago

பாஜக- அதிமுக கூட்டணி பார்த்து முதல்வர் பதற்றத்தில் இருக்கிறார்! தமிழிசை சௌந்தரராஜன் சாடல்!

சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…

1 hour ago

“இவர்கள் மத்தியில் வேலை செய்ய முடியாது! நான் விலகுகிறேன்!” துரை வைகோ பரபரப்பு அறிக்கை!

சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…

2 hours ago