நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்! மஹாராஷ்டிராவில் தேர்வெழுதி தேனியில் படித்து வரும் தமிழக மாணவன்!

Published by
மணிகண்டன்

இந்தியாவில் மருத்துவப்படிப்பில் சேருவதற்கு, நீட் நுழைவு தேர்வு அவசியமான ஒன்றாகும். இந்த நுழைவு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டு அதன் விவரங்கள் தற்போது சுகாதாரத்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த 2018 மே மாதம் நீட் நுழைவு தேர்வு நடைபெற்றது. அப்போது புகாருக்கு உட்பட்ட மாணவன் மஹாராஷ்டிரா, மும்பையில் நீட் தேர்வை எழுதியுள்ளார். இந்த மாணவர் ஏற்கனவே இருமுறை சென்னையில் நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மாணவர் தற்போது தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படித்து வந்துள்ளார்.  இந்த மாணவரின் நீட் நுழைவு சீட்டு ( ஹால் டிக்கெட் ) புகைப்படமும், தற்போது  தேனி மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக எடுக்கப்பட்ட புகைப்படமும், வெவ்வேறாக இருந்ததால், கல்லூரி நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்லூரி முதல்வருக்கு தகவல் தெரிவர, அவர் சம்பத்தப்பட்ட மாணவனின் விவரத்தையும், தனது புகாரையும் சுகராதரத்துறை இயக்குனருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

3 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

15 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

20 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

20 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

21 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

21 hours ago