“நீட் கொடுங்கோன்மையை நிறுத்தமாட்டோம்… பிரதமர் மோடி அரசு அடம்பிடிப்பது நியாயம்தானா?” – கே.பாலகிருஷ்ணன்..!

மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் வேதனையான செய்திகள் தினம் தினம் வாட்டுவதாக சிபிஐ(எம்) மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளின் இளங்கலை படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு இரண்டு நாட்களுக்கு முன்னர் நாடு முழுவதும் 3800 -க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது.இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 16.14 லட்சம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர். நீட் தேர்வு 13 மொழிகளில் நடத்தப்பட்டது.
இருப்பினும், கடந்த சில நாட்களாக, நீட் தேர்வு கேள்வித்தாள் கசிவு பற்றிய வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வந்தன.அதன,உறுதி செய்யும்விதமாக, ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (RIET) கல்லூரியில் நடந்த நீட் தேர்வு மையத்தில் இருந்து நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒரு மாணவி உள்பட 8 பேரை ஜெய்ப்பூர் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 10 லட்சம் பணம் மீட்கப்பட்டது.
ஆனால்,மறுபுறம் நம் தமிழகத்தில் நீட் தேர்வை மூன்றாவது முறையாக எதிர்கொள்ள மறுத்து தனுஷ் என்ற மாணவரும்,தேர்வு எழுதிய கனிமொழி மற்றும் சௌந்தர்யா என்ற இரு மாணவிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில்,நீட் தேர்வு வினாத்தாள் வெளியானது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“நீட் வினாத்தாளை கடத்தி, ரூ.35 லட்சத்திற்கு விற்பனை செய்த அவலம் ஜெய்பூரில் அம்பலமாகியுள்ளது. மறுபக்கம் மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் வேதனையான செய்திகள் தினம் தினம் வாட்டுகின்றன. இந்த நீட் கொடுங்கோன்மையை நிறுத்த மாட்டோம் என இப்போதும் மோடி அரசு அடம் பிடிப்பது நியாயம்தானா?”,என்று பதிவிட்டுள்ளார்.
நீட் வினாத்தாளை கடத்தி, ரூ.35 லட்சத்திற்கு விற்பனை செய்த அவலம் ஜெய்பூரில் அம்பலமாகியுள்ளது.
மறுபக்கம் மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் வேதனையான செய்திகள் தினம் தினம் வாட்டுகின்றன.
இந்த நீட் கொடுங்கோன்மையை நிறுத்த மாட்டோம் என இப்போதும் மோடி அரசு அடம் பிடிப்பது நியாயம்தானா?
— கே.பாலகிருஷ்ணன் – K Balakrishnan (@kbcpim) September 15, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025